உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.
Showing posts with label இறுதி காலம். Show all posts
Showing posts with label இறுதி காலம். Show all posts

Monday, November 28, 2016

கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் உருவாக்கப்பவதை தவிர்க்குமாறு உலகின் உயர் மட்ட விஞ்ஞானிகள் பலர் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகில் வாழும் மிகப் பெரிய விஞ்ஞானிகள் எனக் கூறப்படும் பேராசிரியர் ஸ்டீவன் ஹாக்கின், நோம் சோமஸ்கி, எலன் மாஸ்க், மற்றும் ஸ்டீவ் வொஸ்னியேக் ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கொடூரமான ரோபோக்களை உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்காலத்தில் மிகவும் குறுகிய காலத்தில் முழு மனித இனத்தையும் அழிக்கும் திறன் இந்த ரோபோக்களிடம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகில் பல நாடுகள் போர் நடவடிக்கைகளுக்காகவும் பாலியல் தேவைகளுக்காகவும் ரோபோக்களை உருவாக்கி வருகின்றன.
உலகின் பாதுகாப்பு மாத்திரமல்லாது நாகாரீகத்தின் எஞ்சிய பகுதிகளும் இதனால், அழியும் ஆபத்து இருப்பதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரஷ்யா ஏற்கனவே தனது கண்ணுக்கு புலப்படும் அனைத்தையும் சுட்டுக்கொல்லும் நோக்கில் ரோபோ இயந்திரம் ஒன்றை தயாரித்துள்து.
மனிதனின் சில செயற்பாடுகள் திரைப்படங்களில் உச்சக்கட்ட இறுதி காட்சிகளில் வரும் துரதிஷ்டவசமான சம்பவங்கள் போல் மனிதனுக்கு அழிவை ஏற்படுத்தும் நிலைமையாக மாற வழிவகுக்கலாம் என்பது நிச்சயமானது
இந்த தகவல் வேதாகம தீர்க்கதரிசனம் விரைவில் நிறைவேற இருக்கிறது என்பதை காட்டுகிறது  இதோ அதற்கான வசனம் 
 வெளிப்படுத்துதல் 13 அதிகாரம்
14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.  
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.

Share:

Wednesday, September 28, 2016

வஞ்சினையான ஒரு மத ஒற்றுமை உபதேசம்

 வஞ்சினையான  ஒரு மத ஒற்றுமை உபதேசம்  பலரை உண்மை தெய்வம் இயேசுவை வீட்டு வழி  விலக வைக்கும் ஒற்றுமையின் பெயரினால் ஆன ஒரு தந்திரமான வஞ்சினை ஒரு காலத்தில் தங்களது வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணித்தவர்கள் இன்று போலியான விக்கிரங்கங்கள் முன்னால் கரம் கூப்பி நிக்கின்றனர் இது கடைசி காலம் வஞ்சகர்களின் காலம் 
நன்றி: இரட்சிப்பின் வழி  
Share:

Monday, February 22, 2016

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 11

நவீன உலகில் எங்கு பார்த்தாலும் பெய்யும் போலியான அன்பும் நடிப்பும் நயவஞ்சகம் விபசாரம்,வேசித்தனம், கொலைவெறியர்,காம வெறியர் ,பண வெறியர்,என எல்லாரும் வெறிபிடித்து  அலைகின்றனர் அனைவர் உள்ளத்திலும் கடவுள் ஒருவர் இருக்கின்றாரா?ஏன் அவர் இதை எல்லாம் பார்த்து  கொண்டிருகிறார். என்ற எண்ணம் தோன்றுவது இயற்கையே .நாம் கலியுகத்தின் மத்தியபகுதியில் வாழ்ந்து வருகிறோம். என்பதிற்கு இத்தகைய நிகழ்வுகள் மிக பெரிய  சான்றாக அமைகின்றது .இறுதி கால மக்கள் எப்படி இருப்பார்கள் என்று வானத்தையும் பூமியை யும் தனது வாயின் வார்த்தையால் உருவாகிய ஒரேஒரு மெய் தெய்வம் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எழதி கொடுத்துள்ளார்.வரும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க வேண்டிய ஒரே ஒரு வழியையும் வேதாகமத்தில் காட்டியுள்ளார்.உலகில் வாழும் எந்த மனிதனாலும்  எந்த நாட்டை சேர்ந்தவனாய் இருந்தாலும் அவர்கள் முன் இரண்டு தெரிவுகள் உள்ளது .

1) வானத்தையும் பூமியையும் படைத்த  ஒரே மெய்யான தெய்வம்  இயேசுவை பின்பற்றுவது (நிலை  வாழ்வு தருவது )
2) ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகாரி சொல்லும் உலக பொது மதத்தை   பின்பற்றுவது (நித்ய அழிவு )

இந்த இரண்டில் வாழ்வா ? சாவா?  எந்த தெரிவை பின்பற்றுவது என்பது ஒருவரது தனிபட்ட விருபத்துக்கு  ஒரே மெய்யான தெய்வம் இயேசு விட்டுள்ளார் . 

1வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில்   நீங்கள் கடும் உபத்திர்த்தையும் ,கடும் ஆபத்தையும் ,கடும் அவமானத்தையும் ஏன்  உங்கள் உயிரையும்  இயேசுக்காக விட வேண்டி வரும் என வேத வசனம் முன் உரைக்கிறது  ஆனால் உங்களுக்கு  நிலை  வாழ்வு கிடைப்பது  உறுதி  பரலோகத்தில் காண்க
"வெளிப்படுத்துதல் 12:11 
 நமது சகோதரர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், தங்கள் சாட்சியின் வசனத்தாலும் சாத்தானை வென்றார்கள். அவர்கள் தம் வாழ்வைக் கூட அதிகம் நேசிக்கவில்லை. அவர்கள் மரணத்துக்கும் அஞ்சவில்லை."


2வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில் உங்களது ஆயுட்காலம் முழுவதும் சகலவிதமான  உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம் .ஆனால் இரண்டு  நிபந்தனையை நீங்கள் கட்டாயம் நிறை வேற்றியே ஆக வேண்டும்.



நிபந்தனை 01) காலை ,மதியம்,  மாலை மூவேளையும் நீங்கள் உலகத்தின் எங்கு நின்றாலும் ஒரு சிலை உள்ள திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும் .அத்துடன் அவர்கள் சொல்லும் ஒரு மந்திரத்தை சொல்லி  சொல்லி வணங்க  வேண்டியது  ஒவொரு தனி மனிதனும் கட்டாயம் செய்ய  வேண்டும் இல்லையேல் நீங்கள் கொள்ள படுவது உறதி ( இந்த நடைமுறை ஏற்கனவே ஒரு மதத்தில் நடைமுறையில் உள்ளது )

காணக 
வெளிப்படுத்துதல் 12 :14
    14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.

    15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.


நிபந்தனை 02)  உங்களது நடவடிக்கையை எந்தநேரமும்  கண்காணிக்க ஒரு முத்திரையை உங்களது உடலில் பதித்தால் மாத்திரமே 7 ஆண்டுகள் ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகார ஆட்சியில் சகலவிதமான  உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம். 

ஆனால் இந்த உலக வாழ்க்கை முடிந்த பின் சாத்தானுடன் மற்றும் அவனுடைய கள்ள தீர்கதரிசியுடன் நித்திய அக்னியில் பரலோகத்தில்  வதை கபடுவது உறுதி 
இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.  
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01


உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 03

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 05


Share:

Wednesday, February 17, 2016

Wednesday, November 11, 2015

RFID என்ற பெயரின் மறைக்கபட்ட இரகசியம் என்ன ?

சாத்தான் எப்படி தந்திரமாக இந்த பெயரை இப்போது வழக்கத்தில் இல்லாத மொழியில் வைத்து அதற்கு வெளியில் வேறு ஒரு அர்த்தத்தை கூறி அனைவரையும் முட்டாள் ஆக்கி வருகிறான்
Share:

Thursday, October 22, 2015

Wednesday, October 21, 2015

வஞ்சனையின் காலம் வந்து விட்டது

வஞ்சனையின் காலம் வந்து விட்டது மிகவும் எச்சரிக்கையாக இருங்க்கள்  
Share:

Tuesday, August 4, 2015

ஓரின சேர்க்கையாளரின் குறி சிறு குழந்தைகள்

ஓரின சேர்க்கையாளரின் குறி சிறு குழந்தைகள்  
Share:

Monday, May 18, 2015

ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆசீர்வாதம் செய்வதில் எந்த தடையும் இல்லை

ஓரே இனத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை ஆசீர்வாதம் செய்வதில் எந்த தடையும் இல்லை என பிரான்ஸ் நாட்டு பெண்டகோஸ்டல் தேவாலயங்கள் அமைப்பு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்களின்(Gays&Lesbians) திருமணத்திற்கு திருச்சபை பாதிரியார்கள் ஆசீர்வாதம் அளிக்க கூடாது என்ற நடைமுறை சில வருடங்களாக வழக்கத்தில் இருந்துள்ளது.
இந்த நடைமுறைக்கு எதிராக ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆசீர்வாதம் செய்த மதகுரு ஒருவரின் பதவியும் சமீபத்தில் பறிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒரே இனத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை மதகுருமார்கள் ஆசீர்வாதிக்கலாமா என்று கருத்து கேட்டு சமீபத்தில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
Union of Protestant Churches in France" (EPUdF) என்ற அமைப்பை சேர்ந்த 100 முக்கிய பிரதிநிதிகளிடம் நடத்திய இந்த வாக்கெடுப்பில், சுமார் 94 பேர் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆசீர்வாதிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவு தராதவர்களை திருச்சபை குருமார்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரோட்டஸ்டண்ட் தேவாலயத்தின் இந்த அனுமதி, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Alex Rohne என்பவர் கூறுகையில், சில இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் மற்றும் நாசிசவாதிகள் போல் ஓரினச்சேர்க்கையாளர்களை கீழ்தரமாக நடத்திவந்த சூழ்நிலை தற்போது மாறியுள்ளது.
திருச்சபைகளின் இந்த நடவடிக்கை ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்திருக்கிறது என்றார்.
ஐயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து நாடுகளும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்த உள்ள நிலையில், பிரான்ஸ் புரோட்டஸ்டண்ட் தேவாலயங்கள் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலேயே 1,10,000 உறுப்பினர்களுடன் சுமார் 4,00,000 கத்தோலிக்கர்கள் புரோட்டஸ்டண்ட் தேவாலயங்களின் நம்பிக்கையை பின்பற்றுவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விளக்கமான பதிவு காண்க 

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 09

Share: